நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளான இன்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.

சென்னை நீலாங்கரை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் அமைந்துள்ள விஜய் வீட்டின் முன்பு குவிந்துள்ள ரசிகர்கள் விஜய் அண்ணா..வெளியில் வாருங்கள் என கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இயக்க பொறுப்பாளர் சரவணன் நடிகர் விஜய் ,வீட்டில் இல்லை என்று கூறி ரசிகர்களை கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியும் ரசிகர்கள் தர்ணா செய்து வருகின்றனர்.