இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனப் பல பொறுப்புகளை ஏற்று ‘மூடர் கூடம்’ படத்தை வெளியிட்டவர் நவீன்.

தற்போது இவரது அடுத்த இரண்டு படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (மே 14) அவர் பிறந்த நாள் என்பதாலும், ஈகைத் திருநாளை முன்னிட்டும் இந்த அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் தரப்பு வெளியிட்டுள்ளது.

“இந்த ஈகைத் திருநாள் அன்று, இயக்குநர் நவீனுடன் இரண்டு படங்களில் இணைகிறோம் என்பதைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் அவர் இயக்கும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்துக்குப் பின் இது நடக்கும். அவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.