சென்னை: சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்து உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்குப்திவுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், அவர்களின் வாக்கு உள்ள தொகுதி உள்ள இடத்தில் மட்டும் தான் 12டி விண்ணப்பம் அளிக்க முடியும். வேறு தொகுதியில் பிற மாவட்டங்களில் இருந்தால் தபால் ஓட்டு அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.