சென்னை:

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும், திமுக.வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது அவரது சட்டை கிழிந்தது.

 

இது குறித்து ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை அருகே உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத் தொடங்கினார்.

இதில் தி.மு.க., எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த தகவல் அறிந்து சென்னையில் உள்ள திமுக.வினர் மெரினாவில் குவிந்து வருகின்றனர். எம்பி கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.