சென்னை:
க்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அதில், உக்ரைனில் கல்வி பயின்றவர்களின் நிலைகுறித்து மக்களைவையில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனை பாதுகாக்க பிரதமர் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.