திருவண்ணாமலை

ன்று ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஆனி திருமஞ்சனம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பான உற்சவமாகும்.

இந்த திருநாளில் சிவன் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை நிகழ்வது வழக்கமாகும்.

இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

இன்று அதிகாலை ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்துள்ளது.