சென்னை: 
9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு மாவட்டங்களில் கணிசமான அளவில் மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று கூறினார்.
இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக நாளை தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.