சென்னை: பாலியல் தொல்லை புகாரில் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில்  அமைந்துள்ள சுசில்ஹரி பள்ளியின் நிர்வாகியாக சிவசங்கர் பாபாமீது பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில், போக்சோ அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபா வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒருமுறை செங்கல்பட்டு சிறையில் இருந்தபோது உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை ரைஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு நேற்று திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிறை நிர்வாகம் சென்னை  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.