சென்னை: பாரதமாதா, இந்து கடவுள்கள் மற்றும் திமுவை கடுமையாக விமர்சித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் அருமனையில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா, திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்றும், பாரத மாதா மற்றும்,  இந்து கடவுள்களையும் பிரதமர் மோடியையும் இழிவாகவும், அவதூறாக பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

கிறிஸ்தவ மத போதகரின் பேச்சு  மக்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மதங்களிடையே விரோதத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த ஜார்ஜ் பொன்னையா தலைமறைனார். அவரை  அவரை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது,.

இந்த நிலையில், இன்று காலை, மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் அவரை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை, பாரதமாதா, இந்துமதம் குறித்து ஆணவமாக பேசிய மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு….