சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்கள் குறித்து சர்ச்சைகிடமான கருத்துக்கள் கூறி வரும் பாரதியஜனதாவை சேர்ந்த ராஜாவுக்கு, சார், இது தப்பு என்று பதில் அளித்துள்ளார்.

தமிழக பாரதியஜனதா கட்சியை  எச்.ராஜா,  வாயைத் திறந்தாலே மத துவேஷப் பேச்சுதான்  பேசி வருவகிறார்.  தற்போது நடைபெற்று வந்த தமிழக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் குறித்து தேவையில்லாமல்  ஹிப்ஹாப் தமிழா ஆதியை இழுத்து அவரிடம் நாறியுள்ளார் ராஜா.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த இளைஞர்கள் போராட்டம் குறித்து பாஜகவின் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களைப் பதிவிட்டார். அதுபோல ஜல்லிக்கட்டு ஆர்வலருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி  குறித்தும் தனது கருத்தை பதவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போராட்டக் களத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இசையமைப்பாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி.

பின்னர் இதுகுறித்து டுவிட் செய்த ராஜா,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் பிரிவினைாதிகள், முஸ்லீம் அடிப்படைவாதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டனர் என்பதை ஆதி தெளிவாக சொல்லி விட்டார் என போட்டிருந்தார்.

இதற்கு ஆதி நெத்தியடியாக பதிலளித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதில் டிவீட்டில், சார், இதெல்லாம் தப்பு. எனது படத்தை சில போஸ்டர்களில் சிலர் தவறாகப் பயன்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன்.

போராட்டம் வெற்றி பெறும் வரை இளைஞர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று கூறியிருந்தார் ஆதி.

தற்போது போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.