‘என்ஜாய் எஞ்சாமி’பாடலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தஒப்பாரி பாடகி பாக்கியம்மா, கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 2019-ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகாடெமியில் முதன்முறையாக ஒப்பாரி நிகழ்ச்சியை தனதுகுழுவினருடன் இவர் அரங்கேற்றி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியம்மாவுக்கு கடந்த வியாழனன்று திடீர்உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.