நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் பவர் பாண்டி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ராஜ்கிரண் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்த தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குநரும் ஆகிய செல்வ ராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் அத்திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது நகைச்சுவையாகவும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த தனுஷ் மிக்க நன்றி செல்வா, நான் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளேன் உங்களுக்கு சில காட்சிகள் பிடித்துவிட்டது அது போதும், எல்லா புகழும் உங்களுக்கே என்று கூறியுள்ளார்.
அண்ணன் தம்பி பாசம் என்றால் இதுதாம்பா..!