rana
பாகுபலி என்ற சொல்லை கேட்டாலே பாகுபலியை கட்டப்பா எதுக்காக கொன்னாரு? அப்படிங்குற கேள்வி எல்லோருக்கும் வந்து விடும். அந்த அளவுக்கு இந்தியாவில் இத்திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் பஸ்ட்டு லுக் வருகின்ற 22-ஆம் தேதி, அத்திரைப்பட ஹீரோவின் பிறந்த நாளன்று வெளியிடப்போவதாக கூறியிருந்தனர். இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சொன்னவுடன் இத்திரைப்படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது.
நார்த் அமெரிக்காவின் வெளியீட்டு உரிமை மட்டுமே கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலருக்கு கிரோட் இன்டியன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இவர்கள் தான் வெளியிடுகின்றனர்.