சென்னை,

டப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கும் சட்டமன்ற அவசர கூட்டம் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியினரும், ஓபிஎஸ் அணியினரும் வலியுறுத்தினர்.

இதன் காரணமாக சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் எதிர்க்கட்சியினரை சபை காவலர்கள் இழுத்தும், தள்ளியும், குண்டுகட்டாக தூக்கியும் வெளியேற்றப்பட்டனர். இந்த மோதலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. அவரும் தாக்கப்பட்டதாக கூறினார்.

இதுகுறித்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே விசாரணையின்போது, சட்டசபை அமளி தொடர்பாக சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு பதில் அளித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பதில் மனு தாக்கல் செய்துள்ளால். அதில், சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதிகளில் இடமில்லை என்றும், பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறி உள்ளார்.