சென்னை: பாலியல் தொல்லையால் சென்னை அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், பள்ளி பாதுகாப்பானது இல்லை தெரிவித்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போரூரை அடுத்த மாங்காடில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார் 11ம் வகுப்பு மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள சக்தி நகரில் வந்து வருகிறார். இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோகள் வெளியே சென்ற நேரத்தில்,  அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

அத்துடன், மாணவியின் அறையில் சோதனை நடத்தினர்.  மாங்காடு போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையினரிடம்  சிக்கியது.  அதில், Stop sexual Harrasment…. இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. அந்த கனவு வந்து தொல்லை பண்ணுது. படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. என்னோட கனவும் எல்லாம் போய்டுச்சி. எவ்வளவு வலி.  எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைகிறேன். உறவினர்கள்,  ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீங்க.. அம்மா போய்ட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு… பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.