சென்னை: 
னமழை காரணமாக 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையில் அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், காலை சுமார் 10-மணி அளவில் மழை பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் கனமழையாக உருவெடுத்தது. சென்னையிலும் பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
இந்த கனமழை காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.