தஞ்சாவூர்:

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை உடல் தகனம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் 15 பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா கார் மூலம் இன்றிரவு விளார் கிராமம் வந்தடைந்தார். கணவர் உடலை பார்த்து சசிகலா கண்ணீர் விட்டு கதறினார். டிடிவி தினகரனும் விளார் கிராமம் வந்தடைந்தார்.