நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

சமீபத்தில் நாக சைதன்யாவுடனான தனது திருமண பிரச்சனைகள் குறித்து கேட்ட ஒரு நிருபருக்கு பதிலடி கொடுத்த சமந்தா தலைப்பு செய்தியாக மாறினார். கடந்த இரண்டு வாரங்களாக, சமந்தா மற்றும் சைதன்யா திருமணமான நான்கு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் வலம் வந்தன.

இன்று, சமந்தா இன்ஸ்டாகிராமில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபல ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கர் ஆகியோருடன் பார்ட்டியில் கலந்துக் கொண்டபுகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CUB7cBXBTaa/