மதுரை:

களின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலூன் கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் சலூன் நடத்தி வரும் ஒருவர், தனது மகளின் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை, ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவியுள்ளார். இவர் வழங்கிய உதவி மூலம் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடந்த ஒரு வாரகாலமாக தினமும் 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலசிருபோத்து கிராமத்தில் பிறந்த மோகன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நெல்லிதோப்பு பகுயியில் செட்டிலானார். சலூன் கடை வைத்திருக்கும் மோகன், பாதிகப்பட்ட மக்களுக்கு உதவுவது குறித்து பேசினார். அப்போது, நான் உதவி வழங்குவதை கேள்வி பட்டு ஏராளமான மக்கள் என் வீட்டு கதவை தட்ட தொடங்கியுள்ளனர். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து உதவிகளை வழங்கி வருகிறேன். மேலும் பணம் தேவைபட்டால் எனது மனைவியின் நகைகளை வைத்து, எனது இடத்தை விற்றும் உதவிகள் செய்வேன் என்று தெரிவித்துள்ளன. உதவி செய்வதால் இழந்த பணத்தை என் வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் சாம்பாதித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்துளார்.