சேலம்: கல்வி கட்டணத்தை செலுத்தாத பள்ளி மாணாக்கர்களை சேலத்தில் உள்ள தனியார் பள்ளி வகுப்புக்கு வெளியே அமர வைத்த சம்பவ்ம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை ஆசிரியர் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மாணாக்கர்களை வெளியே அமர வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், கல்வி கட்டணமும் முழுமையாக வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசும், உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சேலத்தில் உள்ள தனியார் பள்ளி  கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் அமர வைத்துள்ளது. இது தொடர்பாக பெற்றோக்ரள்  பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் காந்தி ரோடு பகுதியில் உள்ள  கிறிஸ்தவ பள்ளியான ஈடன் கார்டன் பள்ளிடியில் இந்த கொடுமை அரங்கேறி உள்ளது.  ஈடன் கார்டன் பள்ளி சுய நிதி பள்ளி என்பதால் கல்வி கட்டணம் கட்டாத மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதை ஏற்று பள்ளி ஆசிரியர்கள்,  கட்டணம் செலுத்தாத 20 மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமரவைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த விசாரணையில், உயர்நிலை பள்ளி மாணாக்கர்களுக்கு ஈடன் கார்டன் பள்ளி கல்விக் கட்டணமாக ரூ.44ஆயிரம் விதித்துள்ளது. அதை இரண்டு தவணை யாக கட்ட சொல்லி பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை தொடர்ந்துள்ளது.  இருந்தாலும் பல பெற்றோர்கள் பாதி கல்வி கட்டணம் செலுத்திய நிலையில், பிப்ரவரி 1ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால்,  முழு தொகையையும் கட்ட சொல்லி நிற்பந்தித்து, மாணாக்கர்களை வகுப்புறைக்குள் விடாமல் வராண்டாவில் அமர வைத்துள்ளனர்.   இந்த காட்சிகளை நேரடியாக பெற்றோர்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர்.

அப்போது பள்ளி நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீடியோவை பதிவு செய்யக்கூடாது என்று சொல்லும் நபர் தாங்கள் செய்தது தவறு என உணராமல் பெற்றோர்களை வெளியில் அனுப்புவதிலேயே குறியாக இருந்ததையும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை  அருகே உள்ள  தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவியை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோருடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே வந்து அமர வைத்து படிக்க வைக்கும் காட்சிகள் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.