சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 25 கோயில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று  இந்து சமய அறநிலையத்துறை  அறித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 5 மாதங்களில் 50 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கும்பகோணம் வட்டம் திருநாகஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் லாகடம் அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கொங்குநாச்சி அம்மன் திருக்கோயில், சென்னை மாவட்டம் வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு பூதநாரயணபெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருள்மிகு தில்லைவிநாயகர் திருக்கோயில், பட்டுக்கோட்டை அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில், கந்தர்வகோட்டை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், திருப்பூர் மாவட்டம் அலகுமலை அருள்மிகு முத்துக்கமார பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம் பேரையூர் அருள்மிகு காளமேக பெருமாள் திருக்கோயில் உட்பட்ட ஐம்பது திருக்கோயிலில் கடந்த ஐந்து மாதங்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அருள்மிகு சீனிவாச வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருள்மிகு செல்லப்பர் வகையறா திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு வளரொளீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற் றாங்கரை அருள்மிகு ஆனந்த வல்லியம்மன் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். பாபநாசம் அருள்மிகு தாமோதர வினாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில், கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், வருகின்ற 06.02.2022 அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில் (11.02.2022), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலந்தூர் அருள்மிகு வீரனார் மற்றும் அய்யனார் திருக்கோயில் (11.02,2022), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் தட்டாரப்பட்டு அருள்மிகு தேவி குங்குமக்காளியம்மன் திருக்கோயில் (07.02.2022), கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் பெரியகண்டியாங்குப்பம் அருள்மிகு வெண்மலையப்பர் திருக்கோயில் (11.02.2022) பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (11.02.2022), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பாளுர் அருள்மிகு கல்யான சுந்தரியம்மன் திருக்கோயில் (20.02.2022), 25க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருக்குடமுழுக்கு நன்நீராட்டு விழா இம்மாதம் (பிப்ரவரி) சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.