சென்னை: ராணிப்பேட்டை சிப்காட்டில் ஆலை விரிவாக்க பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சிப்காட்-இராணிப்பேட்டையில் ரூ.145 கோடி முதலீட்டில் SOL இந்தியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை சிப்காட் ஆலையில் புதியதாக திறக்கப்படும் ஆலையானது, திரவ மருத்துவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த தொழிலக மற்றும் மருத்துவ உற்பத்தி ஆக்சிசஜன் உற்பத்தி ஆலை துவங்கப்பட உள்ளது.