சென்னை: ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கிய திமுக எம்.பி. செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒடிசாவைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா என்பவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து தான் பி.டெக் படிக்க வேண்டும் என்று உதவி கோரியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் இதனை அறிந்த தருமபுரி திமுக எம்.பி. செந்தில் குமார், நேரில் சென்று மாணவிக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.  மாணவியின் மேற்படிப்புக்காக வங்கி மூலம் கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திமுக எம்பி செந்தில்குமாரின் இந்த நற்செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.