சென்னை: காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல  ரவுடி படப்பை குணா இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பிரபல என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டு வெள்ளைத்துரையும் பணியமர்த்தப் பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து,   கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி படப்பை குணா இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி குணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.