பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார நாமினேஷன் நடைபெறுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷிவானி, கேபி மற்றும் ஆஜீத்தை டார்கெட் செய்கின்றனர். காரணம் டாஸ்க்கில் குறைவான பங்களிப்பு இருந்ததாக தெரிவித்தனர். ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். பிறகு வந்த ரியோ ரம்யா பாண்டியனை நாமினேட் செய்தார்.

லிஸ்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது இன்றைய எபிசோடு ஒளிபரப்பானால் தான் உறுதியாகும். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரியின் ஆட்டம் குறித்து ஷிவானியுடன் ஆலோசிக்கிறார் ரம்யா. ரம்யா மற்றும் ஷிவானி பேசுகையில், ஆரியின் செயல் இருவருக்குமே பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.