டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar170 படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

அதற்காக கொச்சி செல்லும் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “நாளை படப்பிடிப்பு துவங்க உள்ளதை அடுத்து படப்பிடிப்பிற்கு செல்கிறேன்” என்று கூறினார்.

மேலும், ஜெயிலர் திரைப்படம் தான் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றுள்ளதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

“170வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்குகிறார், இந்த படம் ஒரு நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான, பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளனர்.