சென்னை: ரஜினி சொன்ன அதிசயம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நிகழ்ந்து விட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆசிரியர்களின் விருப்பு ஓய்வு தொடர்பான விவகாரத்தில் அனைத்து சங்கங்களின் கருத்துகள் கேட்கப்படும்.

 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தமது குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் நடத்தப்படும்.

ரஜினிகாந்த் சொன்ன அதிசயம், அற்புதம் நடந்துவிட்டது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அந்த அதிசயம் நடந்து முடிந்திருக்கிறது. அமைச்சர்கள், அன்பும், அறனுமாய் நடந்து கொண்டதாலேயே இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது என்று கூறினார்.