டெல்லி:

மிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில், நிர்ணயிக்கப்பட்ட அளவை நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின்போது, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, , நாட்டில் விநியோகிக்கப்படும் பால் பொது மக்கள் உபயோகப்படுத்துவதற்கு தகுந்ததாக உள்ளதா?  Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறதே என்று அதுகுறித்து மத்தியஅரசு கவனிக்கிறதா? என கேள்விக்கு எழுப்பியிருந்தார்.

இதற்கு  எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 6,432 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதில் 6,432 மாதிரிகளில் 338 மாதிரிகளில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இது மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 5.7% என்று  தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என்றும், டெல்லியில் பரிசோதனைக்கு பயன்படுத்தய 262 மாதிரிகளில் 38 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாகவும்,  கேரளாவில் 87 மாதிரிகளில் 37 மாதிரிகள் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வை தேசிய  உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்தியதாகவும், பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை இருப்பது வழக்கமான ஒன்று தான் என்றும் இருப்பினும் அது அளவை மீறுகின்றபோது மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் .

இவ்வாறு கூறியுள்ளார்.