சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மிக்ஜம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. சிறிது சிரிதாக சென்னையில் இயல்பு நிலை திரும்பி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.

தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கரூர்,திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.