சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மழையால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் , பெரம்பலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி,தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.