சென்னை: எதிர்க்கட்சிகளின்  குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார்.

குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)  18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும், ஜார்க்கண்ட்  மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

அதன்படி, இன்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்கா சென்னை வருகை தந்துள்ளார். இங்கு, மாநில முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலினை, திமுக தலைமயகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது, திமுகவின் ஆதரவை கோரினார்.

அதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான  காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கோருகிறார்.