தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 96, திருச்சி 62, கன்னியாகுமரி 61, திருநெல்வேலி 46, மதுரை 41, தூத்துக்குடி 38,

சேலம் 28, ஈரோடு மற்றும் சிவகங்கையில் தலா 24 பேருக்கும், ராணிப்பேட்டை 22,

விழுப்புரம் 18, திருப்பூர் 16, விருதுநகர் மற்றும் தென்காசியில் தலா 14 பேருக்கும், திருவண்ணாமலை 13, நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் தலா 12 பேருக்கும், பெரம்பலூர் மற்றும் வேலூரில் தலா 10 பேருக்கும்,

அரியலூர் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 9 பேருக்கும், திண்டுக்கல் 8, கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 6 பேருக்கும்,

தேனி மற்றும் திருப்பத்தூரில் தலா 5 பேருக்கும், தருமபுரி மற்றும் நீலகிரியில் தலா 4 பேருக்கும், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், கரூர் மற்றும் திருவாரூரில் தலா 2 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேருக்கும், பங்களாதேஷ் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது,

இன்று மொத்தம் 29,524 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,122 ஆண்கள் 947 பெண்கள் என மொத்தம் 2,069 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1,008 பேர் இன்று குணமடைந்த நிலையில் 11,094 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.