சென்னை

சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். 

வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்

நேற்று தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து சென்னை வில்லிவாக்கத்தில் பிரேமலதா விஜயகாந்த்,

“ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் விழித்துக்கொண்டு தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் வந்துவிட்டதால் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று சொல்வது ஏமாற்று வேலை. 

ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. திமுக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவ்ம் இல்லை படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பும் இல்லை  

தற்போது. சென்னையில் மின்கட்டண உயர்வு கடுமையாக உள்ளது. நகரில் எந்த சாலையும் சரியாக இல்லை. எத்தனையோ பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை” 

என்று கூறினார்.