புதுடில்லி

டைபெற உள்ள நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மேலும் 6 பேரைக் காங்கிரஸ் கட்ச் அறிவித்துளது.

நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிரப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்தியப்பிரதேசம், கோவா மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர்ஹவேலியை உள்ளடக்கிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி \ அறிவித்தது.

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்,

”வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், மத்தியபிரதேசம் மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாத்ரா-நாகர்ஹவேலியில் அஜித் ராம்ஜிபாய் மகலாவை கட்சி நிறுத்தியுள்ளது.”  

என்று தெரிவித்துள்ளார்.