தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பிரபு சாலமன். தற்போது அவருடைய மகன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

‘டேய் தகப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜூலை 7) நடைபெற்றது. பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ள கெளசிக் ஸ்ரீபுஹர், ‘டேய் தகப்பா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மதுரை முத்து, விஜய் டிவி பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி.வி. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கவுள்ளார்.

இசையமைப்பாளராக ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவாளராக எஸ்.ஜே.சுபாஷ், நடன இயக்குநராக பாபா பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.