சென்னை:
மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை; சில இடங்களில் பழுது ஏற்படுகிறது அதனால்தான் சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது; அதனை உடனே சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள் என்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.