சென்னை:
சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி அமைத்துள்ளோம் என்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நம் தொகுதி மக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கைகளை எந்நேரமும் என்னிடம் தெரிவிக்க ஏதுவாக அலுவலத்தில் புகார் பெட்டி ஒன்றை அமைத்துள்ளோம். இந்த பெட்டியில் பொதுமக்கள் இடும் மனுக்களில் கூறப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னால் இயன்ற முயற்சிகளை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.