சென்னை:  சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டடங்களின் பரப்பளவை அளவீடு செய்து, சொத்து வரியை கணக்கீடு செய்யும் வகையிலான கையடக்க கருவியை வருவாய்த்துறை அலுவலகர்களுக்கு  மேயர் பிரியா வழங்கினார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி கணக்கீடு செய்யும்போது கட்டடங்களின் பரப்பளவை எளிதில் அளவீடு செய்யும் வகையில் வருவாய் துறை அலுவலர்களுக்கு கையடக்க டிஜிட்டல் கருவியினை (27.10.2022) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் வழங்கினேன்.‌

இந்த நிகழ்வில்  துணை மேயர் மகேஷ்குமார்,  அரசு முதன்மை செயலாளர் கிரண்சிங் பேடி, மற்றும் துணை ஆணையாளர் , மாநகர வருவாய் அலுவலர், உதவி வருவாய் அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.