சென்னை: தமரமற்ற உணவு புகார் காரணமாக விக்கிரவாண்டி அருகே உள்ள மேலும் சில உணவகங்களில் விரைவு பேருந்துகள் நிற்க தடை விதித்து தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் விரைவு பேருந்துகள், சென்னையை அடுத்த மாமண்டூர், விக்கிரவாண்டி உள்பட பல பகுதிகளில் உள்ள சாலையோர ஓட்டல்கள் முன்பு உணவு இடைவேளைக்காக நிறுத்துகிறது. இந்த உணவகங்களில் டிரைவர் கண்டர்களுக்கு இலவசமாக உணவு  மற்றும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதால், அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமற்றும், கடுமையான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக பயணிகள் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, மாமண்டூர் பகுதியில் உள்ள விடுதி முன்பு அரசு பேருந்துகள் நிற்க தடை விதித்து தமிழக போக்குவரத்து துறை நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விக்ரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட உணவகங்களின் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற உணவு புகார் எதிரொலி: மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை…