சென்னை: தரமற்ற உணவு மற்றும் அதிக விலை காரணமாக, விழுப்புரம் அருகே உள்ள  மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை விதித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள், சில குறிப்பிட்ட சாலையோர உணவகங்களில் உணவருந்த பணிக்கப்படுகின்றனர். அரசு பேருந்துகள் வேறு எங்கும் தரமான விடுதிகளில் நிற்காத நிலையில், பேருந்தின் டிரைவர்கள் மற்றும் கண்டர்கடர்கள் நிறுத்தும் உணவகங்களில் உணவு சாப்பிடும் நிலை உருவாகி உள்ளது.  இந்த உணவகங்களில், தரமற்ற உணவுகள் விற்பனை செய்வது மட்டுமின்றி உணவு பொருட்களின் விலையும் கடுமையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

50 ரூபாய்க்கு விற்ற, இரண்டு பரோட்டா, 90 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்ற சாதா தோசை, 40 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்ற, ‘ப்ளைன் ரோஸ்ட்’ 70 முதல், 80 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல், டீ, 15 ரூபாய்க்கும், காபி, 20 ரூபாய்க்கும் விற்றன. பெரும்பாலான உணவகங்களில் பழைய உணவுகளே விற்கப்பட்டதாலும், அசைவ உணவு வேண்டாம் என்றாலும், வேறு ஏதும் இல்லை என்று ஏமாற்றி பயணிகள் சாப்பிட வைக்கப்பட்டடினர். இது கடுமையான விமர்சனங்களை ஏப்டுத்தியது. பல பயணிகள்  சாலையோர உணவகங்களால் ஏற்பட்ட அவதியை, ‘வாட்ஸ் – ஆப், பேஸ்புக்’ கில் பகிர்ந்து வருகின்றனர். இது கடுமையான விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து,  மாமண்டூரில் உள்ள பயணவழி உணவகம் மற்றும் கடைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் போக்குவரத்து கோட்ட மேலாளர் தலைமையில்  ஆய்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆய்வு தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் மாமண்டூர் பயணவழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் ஒப்பந்ததாரான சேலத்தைச் சேர்ந்த ஸ்டார் அசோசியேட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் அனைத்து மோட்டல்கள் என அழைக்கப்படும் பயணவழி உணவகங்களில் ஆய்வு நடத்தப்படும் எனவும், தரம் குறைவாக மற்றும் கூடுதல் விலைக்கு உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்த விலையில் தரமான உணவுகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.