தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில், திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், 3605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

பனங்காட்டுப் படை கட்சி சார்பாக போட்டியிட்ட ஹரி நாடார், அத்தொகுதியில் கணிசமான வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பெற்றார்.

இத்தொகுதியில், மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகள் பெற்றார். பூங்கோதை 70,380 வாக்குகள் பெற்றார். ஹரிநாடார் 37,632 வாக்குகள் பெற்றுள்ளார்.