சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில்  97.45சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை   சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதில், தேர்வெழுதிய வர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகளை, www.dge1.tn.nic.in,  www.dge2.tn.nic.in,  www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாக 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.

அரசு பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. தனியார் பள்ளிகளில் 96.7 சதவிகித தேர்ச்சியும், மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில்  96.30 சதவிகித தேர்ச்சியும், ஆண்கள் மட்டும் படித்த பள்ளிகளில்  86.96 சதவிகித தேர்ச்சியும், இருபாலார் சேர்ந்த படித்து தேர்வு எழுதிய பள்ளிகளில் 94.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி. தேர்ச்சி அடைந்தவர்களில் மாணவிகள் 3,93,890, மாணவர்களில் 3,25,305 பேர் ஆவர்.  தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி. (12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்)

பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேரும், வணிகவியலில் 6142 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை (marksheets ) பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்2 தேர்வில்,  திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது,.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் 97.42 சதவிகிதம் தேர்ச்சியுடம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்

அரியலூர் மாவட்டம் 97.25 சதவிதத்துடன் 3-வது இடத்தையும், கோவை மாவட்டம் 96.97 சதவிதத்துடன் 4-வது இடத்தையும். விருதுநகர் மாவட்டம் 96,64% தேர்சசியுடன்  5வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடைசி 5 இடங்களை பெற்ற மாவட்டங்களில் திருவண்ணாமலை முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 90.47 சதவிகிம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து,  நாகப்பட்டினம் 91.19 சதவிகித தேர்ச்சியும்,  91.32 தேர்ச்சியுடன் திருவள்ளுர் 3வது இடத்திலும்,  91,87 சதவிகித தேர்ச்சியுடன் கிருஷ்ணகிரி 4வது இடத்திலும்,  92,28 தசவிகித தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டமும் இடம்பெற்றுள்ளன.

பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் 90.47 சதவிகிதம் பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.