சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் காவிரி பிரச்னைக்காகவும் மக்கள் போராட வேண்டும் என்று தம்பிதுரை கூறினார்.

இது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி வாரிய விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயாராக இருக்கிறது. இதை அதிமுக கொண்டு வந்தால் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாரா?

காவிரி விவகாரத்தில் அனைத்து மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக போராட வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கில் கூடி மக்கள் எப்படி போராடினார்களோ காவிரிக்காவும் போராட வேண்டும். அதிமுகவுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. மக்கள் நலனுக்காக அதிமுக அரசு செயல்படுகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அரசியலுக்காகவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் எங்களுடையை போராட்டம் தொடரும். மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’’ என்றார்.