சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாய் கடி தடுப்பூசி சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைப்பதால், கிராமப்புறங்களில் நாய் கடிகளால் பாதிக்கப்படுபவர்கள் முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 21-வது நாள் என 4 தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இம்யூனோ குளோபளின் மருந்தானது முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்தப்பட வேண்டும். காலதாமதாகவோ அல்லது அதை மட்டும் தனியாகவோ செலுத்தினால் பலன் இல்லை. இதைக் கடைபிடித்தால் ரேபிஸ் நோய் தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]