சென்னை: மெட்ரோ ரயில் பயணத்தின்போது, ரயிலில் பயணிப்பவர்கள் சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது என்றும், விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் (Chennai) நிலவும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் விரைவான பயணம் மேற்கொள்ள மின்சார ரயில் சேவைக்கு அடுத்து மெட்ரோ ரயில் (Metro Rail) சேவைகள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. இதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மெட்ரோ ரயிர் பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதந்த நிலையில், மெட்ரோ ரயில் பயணம் செல்லும்போது சிலர் போனில் சத்தமாக உரையாடுவது, செல்போனில் ரீல்ஸ் எடுப்பது, சத்தமாக பாட்டு கேட்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெட்ரோ பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
- அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல்;‘
- செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது
- அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல்
மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இந்தச் சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
சென்னை மெட்ரோவில் கடந்த மார்ச் மாதத்தில் 10,197,604 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 13.03.2026 அன்று 3,90,306 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது.
[youtube-feed feed=1]