சென்னை

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட  அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பயணிகல் பாதிப்பு அடைந்துள்ளனர். 

                                                            மாதிரி புகைப்படம்

பொதுமக்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாகச் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இவர்கள் சென்னை திரும்பிவருவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பொதுச்க்க்ச்ல் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவைப்பதாகப் புகார் பொதுமக்கள் அளித்து வருகின்றனர். அதாவது திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கு வழக்கமான நாட்களில் ரூ.1,410 முதல் ரூ.2,130 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.2,900 முதல் ரூ.3,700 வரை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு வழக்கமான நாட்களில் ரூ.1,510 முதல் ரூ.2,300 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.2,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைப் போல் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.1,800 முதல் ரூ.2600 வரை வசூலிக்கப்படுவதாகவும் கோவையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.2,250 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஆம்னி பேருந்துகளின் அதிகபட்ச கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது. தற்போது ஆம்னி பேருந்துகளில்  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.