“புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர உள்ளேன்” என்று பேசியுள்ளார், தமிழில் கால் பதிக்கும் மலையாள தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்.

மோகன்லால் நடிப்பில் இசைப்புயல் ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆரட்டு’ உட்பட பல மலையாள படங்களைத் தயாரித்தவர் கேரளாவின் பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்.

தற்போது தமிழில் களமிறங்கும் இவர், சென்னை சாலிகிராமத்தில், தனது ‘ஹிப்போ ப்ரைம் ‘ நிறுவனத்தின் கிளையை துவக்கி வைத்து, சுவாரஸ்யமான சினிமா நிகழ்ச்சிகளையும் தயாரித்து மக்களிடையே கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தனது நிறுவனம் தமிழில் டிஜிட்டல் மீடியா துறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் தயாரித்த ஆரட்டு படம் கேரளாவில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு பெற்றது. மொழி வேறுபாடு இன்றி அனைவரும் ரசித்தனர்.

காரணம், திரைப்படம் உள்ளிட்ட எந்தவொரு கலைக்கும் மொழி வேறுபாடு கிடையாது.

புதியவர்களாக இருந்தாலும், திறமையானவர்கள் நல்ல கதைகளுடன் அணுகினால், தயாரிப்பதற்கு நான் தயார். எங்களது கதை இலாகா குழு தேர்வு செய்கிற கதைகளைத் தமிழில் தயாரிப்பேன். பெரிய ஹிரோக்களின் படங்கள் என்றில்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு தர நினைத்திருக்கிறேன்” என்றார்.

நல்ல வாய்ப்புக்கா காத்திருக்கும் புதிய இயக்குநர்கள் சக்தி தேவராஜை அணுகுங்கள்!