சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம், வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ளார். டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பிரமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாலியல் வன்முறைக்கு எதிரான படம் என்பதை இந்தப் ப்ரமோவும் வெளிப்படுத்தி இருக்கிறது.

‘ஏண்டா அந்தப் பெண்ணை தொட்டோம்னு நீயும் உன்னோட சந்ததியும் வருத்தப்படுவீங்கடா’ என்று சூர்யா ஆவேசத்துடன் கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

உற்சாகமான சூர்யாவையும் இந்த பிரமோவில் பார்க்க முடிகிறது. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்றும் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் சூர்யா. வழக்கறிஞராகவும் அவர் தேன்றுகிறார்.

ஆகவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்துள்ளது.