ஊட்டி

வரும் 18 ஆம் தேதி வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் வட கிழக்கு பருவமழை காரணமாகத் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.  இந்த மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இங்குச் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் பாதையில் மண்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படாததால் 18 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.