போபால்:
ற்றவர்களின் நாட்டுப்பற்று குறித்து தீர்ப்பு வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலதலைநகர் போபாலில் நேற்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்துஸ்தானத்தில் பிறந்த அனைவருமே இந்துக்கள் என்றும் அவர்கள் இந்துமத பழக்கவழக்கங்களுக்கு மரியாதை தரவேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தினார். இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு முறை வேறுபட்டிருந்தாலும் அவர்கள் இந்து தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். ஆர் எஸ் எஸ் -ன் மூத்த தலைவர் மோகன் பகவத்தின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.